சலார் படத்தில் பிரபாஸ்க்கு சகோதரியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்த ஜோதிகா.! தீயாய் பரவும் தகவல்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பதோடு ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் வலம் வருவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில்  சிறப்பாக வந்த ஜோதிகா ஆரம்பத்தில் தமிழில் டாப் நடிகர்களான அஜித் விஜய் சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் ஜோதிகா.

இவர் சமிபத்தில் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் அதிரிபுதிரி விட்டு அடித்ததோடு சோலோ படங்களிலும் வெற்றியை கண்டு வருகிறார் ஜோதிகா இப்படியிருக்க தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்துள்ள தற்போதைய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன கே ஜி எஃப் படத்தை எடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் சலார் படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக சமீபத்திய செய்திகளில் மிகப்பெரிய அளவில் வைரலாகி நான் இதனை கண்ட ஜோதிகா தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் இது முற்றிலும் வதந்தி இதில் நான் நடிக்கவில்லை என கூறினார்.

jothika

இப்படி இருக்க தற்போது அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தற்பொழுது ரம்யா கிருஷ்ணன் கமிட்டாகி உள்ளதாக தெரியவருகிறது.  ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Leave a Comment

Exit mobile version