16 வருடத்திற்கு முன்பே டிஆர்பி- யை ஏற்றுவதற்காக மகா மட்டமான வேலையை செய்ததா விஜய் டிவி.? உண்மையை உடைத்த நடிகர்

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் ஒன் சீசன் நடைபெற்றது அந்த சீசனில் போட்டியாளராக பப்லு பிரித்திவிராஜ் கலந்து கொண்டார் அப்பொழுது நடுவராக இருந்த சிம்புவுக்கும் பப்லுவுக்கும் மிகப்பெரிய சண்டை நடந்தது அந்த நேரத்தில் அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பல வருடங்களுக்கு பிறகு அந்த சண்டை குறித்து பப்புலு பிரித்திவிராஜ் பேட்டி ஒன்றில் சில தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சிம்புவோடு அப்பொழுது போட்ட சண்டை உண்மையா அல்லது சேனல் தரப்பினர்கள் சொல்லி தான் அதுபோல் நடந்ததா என அந்த பேட்டியில் கேட்டனர்.

அப்பொழுது அந்த போட்டியில் பப்லுக்கு ஜோடியாக  போட்டியாளராக கலந்து கொண்டவர் உமாரியாஸ். மேலும் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் தான். இந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தநிலையில் அது பற்றி பல வருடங்களுக்கு பிறகு பப்லு பேசி உள்ளார்.

ஜோடி நம்பர் ஒன் சீசனில் உமாரியாஸ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி நடுவராக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது பப்லு டான்ஸ் சரியாக ஆடவில்லை என்று சிம்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மிகப்பெரிய சண்டையாக மாறியது.

அப்பொழுது என்னை எப்படி சிம்பு அப்படி சொல்லலாம் என்று பப்லு கேட்க பிறகு சமாதானம் செய்து பார்த்தார்கள் ஆனாலும் சிம்பு பப்லு இடையே மிகப்பெரிய அளவிலான தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிம்பு அழ ஆரம்பித்தார் அப்பொழுது சிம்பு எனக்கு நடிக்க தெரியாது என பேசிய டயலாக் இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் 16 வருடங்களுக்குப் பிறகு உமா ரியாஸ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் இருவரும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்கள்.அந்த பேட்டியில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது  அப்பொழுது பப்லு பிரித்திவிராஜ் இங்க இருக்கும் எல்லோருக்கும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 1ல் என்ன நடந்தது என்ற சந்தேகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் ஆமாம் அதுதான் உண்மை பேசி வச்சு தான் நடந்தது என்று பப்லு சொல்ல அருகில் இருந்த உமாரியாஸ் அப்பொழுது ஏன் நம்மளை ஆட விடலை என அதிர்ச்சியோடு கேள்வி கேட்டார்.

என உமாரியாஸ் கேள்வி எழுப்ப அதற்கு பப்லு உன்கிட்ட சொன்னா நீ அப்பவே அந்த பிரச்சனையை முடிச்சிடுவியே அதனால தான் உன் கிட்ட சொல்லல என பப்லு கூறியுள்ளார். ஆனால் இது குறித்து பப்லு தெளிவாக பேசாமல் இது பற்றி நீங்கள் எல்லோரும் சஸ்பென்சோட இருங்கள் என சிரித்தபடியே கூறியுள்ளார்.

இது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஒருவேளை சேனல் தரப்பில் இருந்து பப்லுவிடம் சொல்லிவிட்டு சிம்புவிடம் சொல்லாமல் இருந்தார்களா அல்லது இருவருக்குமே தெரிந்து இது நடந்ததா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.