பட்டுப் புடவை மற்றும் தலை நிறைய மல்லிகை பூவுடன் அழகில் மிளிரும் ஜனனி ஐயர்.! தங்க சிலையே இவரின் அழகில் தோற்றுவிடும் போல எனக்கூறும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் விஷால், ஆர்யா இவர்களின்  நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அவன் இவன். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்  நடிகை ஜனனி ஐயர்.

இவர் மாடலிங்காக தனது கேரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் 150க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பலூன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடிகையாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவ்வாறு இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு எந்த படமும் சினிமா வாழ்க்கையில் பெரிதாக கைகொடுக்கவில்லை.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க ஜனனி ஐயர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பலர் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள். அந்த வகையில் ஜனனி ஐயரும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி பட்டுப்புடவையில் தலையில் மல்லிகை பூவுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளையும்,கமெண்ட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment