ஹிட் பட இயக்குனரை தனது 30 வது படத்துக்கு வளைத்துப்போட்ட ஜெயம்ரவி – யார் அது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து பின் ஆக்சன் திரைப்படங்களில் வெற்றி கண்டவர் நடிகர் ஜெயம்ரவி. சமீப காலமாக இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்றுள்ளதால்  படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன ஜெயம் ரவி.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் அண்மையில் முடிந்த நிலையில் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருந்தன அதையும் முழுமையாக தற்போது ஜெயம் ரவி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயம் ரவி தனது29வது திரைப்படத்தில் அடுத்து இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆம் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்ற படத்தை இயக்கிய கல்யாண் என்கின்ற இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்புக்கு மாறி உள்ளார் ஜெயம் ரவி. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தனது 30வது திரைப்படத்திற்கான இயக்குனரையும் தேர்வு செய்து உள்ளார் அந்த வகையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் என்பவருடன் இணைய இருக்கிறாராம்.

அந்த படம் முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் என கூறப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த சூட்டிங் தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

Leave a Comment