திடீரென அப்பாவிடம் சரணடைந்த ஜெயம் ரவி.? என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் ரொமான்டிக் அனைத்து விதமான படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக் காட்டியவர் நடிகர் ஜெயம் ரவி.

இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பதையும் வைத்திருக்கிறார். சினிமா உலகில் இப்படி சிறப்பாக குறித்து ஓடிக்கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு இப்பொழுது பெரிய அளவில் படம் கையில் இல்லை.

மேலும் இவர் கடைசியாக நடித்த பூமி திரைப்படமும் பெரிய அளவு வெற்றியை பெறாததால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி இப்பொழுது நம்பியிருக்கும் திரைப்படம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று கதையான பொன்னியின் செல்வன்  படம் தான்.

ஜெயம் ரவி அடுத்ததாக பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் உடன் மீண்டும் ஒருமுறை இணைய முடிவு செய்தார் அந்த படத்தின் படப்பிடிப்பு இரவு நேரத்தில் எடுக்கவேண்டிய சூழல் வளவியது அதை இயக்கும் சமயம் பார்த்து அரசு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே கிடக்கிறது.

ஆனால் நடிகர் ஜெயம் ரவியோ அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தால்தான் நான் இருக்கின்ற இடம் தெரியும் என்பதை உணர்ந்துகொண்டு இப்பொழுது ஹிட் கொடுக்க வேண்டுமென இயக்குனரை தேடி வருகிறார். அவரது அண்ணன் ராஜா மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் அண்ணனை நாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் எடிட்டரும், தயாரிப்பாளருமான அவரது தந்தையை நாடி ஐடியா கேட்டு வருகிறார் ஜெயம் ரவி.

Leave a Comment