முதல் முறையாக ஆக்ஷன் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி – பெரிய சம்பவம் செய்ய போகும் கூட்டணி.!

சினிமா உலகில் ஒரு நடிகர் வெற்றிபெற தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு அதில் தொடர்ந்து பயணித்தால் மட்டுமே அவர் வெற்றியை ருசிக்க முடியும் அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வெற்றிகளை அள்ளி குதிக்கிறார் இவரது கையில் தற்போது கூட பொன்னியின் செல்வன், ஜனகணமன, அகிலன் ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன.

முதலாவதாக வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து அசத்தியுள்ளார். அதை தொடர்ந்து ஜனகணமன, அகிலன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

பூமி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி படங்கள் வெளிவராமல் இருந்து வந்துள்ளன இந்த நிலையில் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றியை ருசிக்க படத்தில் ஜெயம் ரவியின் சினிமா பயணம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக எந்த இயக்குனருடன் ஜெயம் ரவி இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான பதிலும் தற்போது கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஹரி. இப்பொழுது நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை என்னும் படத்தை எடுத்துள்ளார் இந்த படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடுத்து இணைய உள்ளார் என தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் படங்களில் பின்னி பெடல் எடுப்பது ஜெயம் ரவி ரொம்ப கை தேர்ந்தவர் தற்பொழுது ஹரிவுடன் அவர் இணைவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது.

Leave a Comment

Exit mobile version