பல சீன்களை படமாக எடுக்கும் இயக்குனுருடன் இணைந்த ஜெயம் ரவி.? புலம்பும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் சினிமா உலகிற்கு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதத்தில் விஜய்யை வைத்து மெர்சல்,பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து வசூல் வேட்டை பெற்றுத்தந்தார்.

அந்த வகையில் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து படம் எடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜெயம் ரவியிடம் படத்திற்கான கதையை  கூறியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஒரு மார்க்கெட் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே எனவே அதனையே மனதில் வைத்து ஆற்றில் ஜெயம்ரவியுடன் கூட்டணி சேர உள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சிலர் அட்லி ஜெயம் ரவியை வைத்து படம் இயக்கப் போவதில்லை, படம் தயாரிக்க போகிறார் என்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது.

Leave a Comment