அன்றே ரஜினி படத்துக்கு விமர்சனம் கூறிய ஜெயலலிதா..! அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகர் என்றால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பு ஸ்டைல் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இவர் முன்னணி அந்தஸ்தில் இருப்பதற்கு வழி வகுத்து கொடுத்தது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் படையப்பா திரைப்படம் ஒரு திரைப்படம் ஆகும் அந்த வகையில் இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.

இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை சௌந்தர்யா நடித்திருப்பார் அதேபோல இந்த திரைப்படத்தில் ராதாரவி, செந்தில், நாசர், மணிவண்ணன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்கள்.

என்னதான் இந்த திரைப்படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் பிரமிக்க வைத்த கதாபாத்திரம் என்றால் அது நீலாம்பரி கதாபாத்திரம் தான் அந்த வகையில் இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்திருப்பார் மேலும் இதன் மூலமாக தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிகாட்டிய ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையரங்கிலும் மாபெரும் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கே எஸ் ரவிக்குமார் அவர்கள் படையப்பா திரைப்படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் இந்த திரைப்படத்தை நடிகையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் பார்த்துவிட்டு படம் சூப்பராக இருந்தது என்று கூறியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் ஹைலைட் என்றால் அது நீலாம்பரி கதாபாத்திரம் தான் என ரஜினியிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment