ஜெயிலர் திரைப்படத்தில் மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டாரா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட பட பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆந்திரா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் ஆக வளம் வரும் சிவராஜ் குமார் அவர்கள் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் மோகன்லால் கூட இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமானது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதில் அவர்கள் கூறியது என்னவென்றால் மோகன்லால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிட்டது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிர வைத்துள்ளார்கள்.

mohanlal
mohanlal

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகிய மூன்று சூப்பர் ஸ்டார் களும் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும்  அதிகரிக்க வழி வகுத்துள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருவது மட்டுமில்லாமல் அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார் மேலும் ரம்யா கிருஷ்ணன் விநாயகர் யோகி பாபு வசந்த் ரவி அறந்தாங்கி நிஷா பருத்திவீரன் சரவணன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

rajini-01
rajini-01

Leave a Comment