தன்னை ஆன்ட்டி என கூப்பிட்ட நபரின் முகத்திரையை வெட்ட வெளிச்சமாக வெளி உலகத்திற்கு காட்டி வெளுத்து விட்ட ஜாக்லின்.!

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதேபோல் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் டிடி, ரக்ஷன், ஜாக்லின் என அனைத்து தொகுப்பாளர் களுக்கும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய கரகர குரலால் பிரபலமடைந்தவர் ஜாக்லின். இவர் தற்பொழுது தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல்  தொலைக்காட்சியில் மட்டும் நடிக்காமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் அடிக்கடி  புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜாக்குலின் அவர்களுடன் இருக்கும் அந்த நபர் யார் என்ற கேள்வி அதிகம் பேர் கேட்டார்கள். அது மட்டுமில்லாமல் உங்கள் தம்பியா இல்லை அண்ணா என பல கேள்விகள் கமெண்டில் பதிவான நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது என்னுடன் அந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு பெண் தான் தன்னுடைய நெருங்கிய தோழி தான் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண் ஒரு போட்டோகிராபர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கமர்சியல் செய்துகொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்த ஜாக்குலின் அவர் அவருடைய முடியை கட் ஷார்ட் செய்துள்ளது உங்களுக்கு என்ன கஷ்டம் என அந்த வீடியோவில் கேட்டுள்ளார். மேலும் ஒரு நபர் ஜாக்லின் அவர்களை ஆண்டி என கமெண்ட் செய்துள்ளார். அது யாரென்று ஜாக்லின் ஓபன் செய்து பார்த்த பொழுது அவரின் ப்ரோபைல் மோட்டிவேட் படைப்பாளர் என  இருந்தது எனவும். இவர் தன்னை மோட்டிவேட் படைப்பாளர் என்று கூறிக்கொண்டு இவ்வாறு கீழ்த்தரமாக கமெண்ட் செய்வது  எந்த விதத்தில் நியாயம் எனவும் கேட்டுள்ளார்.

மேலும் ஒரு பெண்ணும் ஒரு பையனும் தங்கள் இஷ்டப்படி முடியை வளர்த்துக்கொள்ளவும் உரிமை உண்டு அதேபோல் அந்த முடி அவர்கள் உச்சத்திற்கு வெட்டுவதற்கும் உரிமை உண்டு அதனைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல்  பெரிய பிரச்சனையாகி அவர்களை நினைத்து எனக்கு பரிதாபமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

முடி விஷயத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அப்படியிருந்தும் இப்படி தான் கமெண்ட் செய்வேன் என்று நீங்கள் முடிவு செய்தால் அதை பற்றி கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்கள் மனம் நோகும்படி புகைப்படங்களில் கமெண்ட் செய்வது தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறினார் இல்லை நான் அப்படித்தான் செய்வேன் என்று சொன்னாள் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அந்த வீடியோவில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=Flq89AEKRk4

Leave a Comment