ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக ஜாக்கி ஷெராஃப் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் எப்படியாவது வெற்றி படத்தினை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இருந்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனால் வயதான காரணத்தினால் படத்தில் சுறுசுறுப்பு இல்லை என கூறப்படுகிறது இருந்தாலும் உலக அளவில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் ரஜினி அவர்களை வைத்து திரைப்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.

ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை குறைவாக வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கிறாராம். அதாவது ரஜினிகாந்த் அவர்கள் 100 கொடிக்கு  மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயிலர் திரைப்படத்தில் தன்னுடைய வழக்கம்போல் வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூபாய் 20 கோடி குறைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜாக்கி ஷெராஃப் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப் நடிப்பதற்காக ரூபாய் 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக  கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தினை தொடர்ந்து மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment