உங்க அம்மா சொன்னா இனிக்குது அதே மாமியார் சொன்னா கசக்குதா.! பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறிய கோபிநாத்.. வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் நீயா நானா என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீயா நானா நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் பல தலைப்பின் கீழ் நடைபெறும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இரண்டு தரப்பு விவாதங்களை வைத்து எது சரி எது தவறு என சுட்டிக்காட்டி வரும் கோபிநாத் திடீரென நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

அதாவது இந்த வார நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் அந்தப் பெண்களின் கணவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் நிகழ்ச்சி விவாதம் நடைபெற்றது. அதில் குறிப்பாக பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சைக் கேட்டு உங்கள் கணவர் அணியும் உடையையும் அவர் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் முடிவு எடுக்கிறீர்கள் என்று கூறி இருந்தார் கோபி.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய தாய் நாங்கள் எப்படி நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்று அவங்க தான் அதிகமாக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதன் பிறகு உங்களுடைய மாமியார் ஏதாவது சொன்னால் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று பெண்களைப் பார்த்து கோபிநாத் கேள்வி எழுப்பினார் இதற்கு மறுபடியும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் தான் என்று கூறுகிறார்கள். எந்த கேள்வியை கேட்டாலும் அம்மா பாசம் அம்மா பாசம் எனக் கூறிய பெண்களால் நொந்து போன கோபிநாத் நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இவர் உண்மையாக சொல்லவில்லை சும்மா விளையாட்டுக்காக வெளியேறி விடுகிறேன் என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment