இதோ ஆரம்பிச்சிட்டாங்க … வேட்டைக்கு ரெடியாகும் புஷ்பா 2 டீம்.! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தான உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வசூலில் மிகப்பெரிய லாபத்தை பார்த்தது.

இதை தொடர்ந்து புஷ்பாபு படத்திலிருந்து இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படகு அறிவித்திருந்த நிலையில் தற்போது புஷ்பா படத்திலிருந்து இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் சில பல மாற்றங்களை செய்துள்ளாராம் இப்படத்தின் இயக்குனர் சுகுமார் அவர்கள்.

மேலும் முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் சந்தன கட்டை கடத்தும் ஒரு லாரி டிரைவராக நடித்துள்ளார் அல்லு அர்ஜுன். இரண்டாம் பாகத்தில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுகுமார் அவர்கள் தனது ஒளிபரியாளர்களுக்கு ஒரு சில காட்சிகளை விளக்கமாக எடுத்து அளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

இதை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் மிகப்பெரிய தூணாக நின்றது சமந்தா அவர்கள் தான் ஏனென்றால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இரண்டாம் பாகத்திலும் இதுபோன்ற ஒரு பாடல் இடம் பெறும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் ஊ சொல்றியா மாமா பாடலைப் போல  புஷ்பாபு இரண்டாம் பாகத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் அந்த பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் அதே போன்று ஒரு பாடலுக்கு தமன்னா அவர்கள் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் சமந்தாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment