இந்தியாவில் நடந்ததுபோல தென்னாப்பிரிக்காவில் நடக்காது – அஸ்வின் மாயாஜாலம் எடுப்பட வாய்ப்பே இல்லை – தென்ஆப்பிரிக்கா வீரர் அதிரடி பேச்சு..

இந்திய அணி நியூசிலாந்து உடனான போட்டிகளில் தொடரை கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் போட்டிகளில் விளையாட இருக்கிறது முதலாவதாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது கோலி தலைமையிலான அணி நிச்சயம் இந்த தொடரை வெல்லும் என்பது இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

தென்னாபிரிக்கா அணியும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது அந்த அணியின் சிறப்பான வீரர்களை தன்வசம் வைத்து விளையாடி வருகிறது இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான  டீன் எல்கர் பேட்டி ஒன்றில் பேசிய போது அவர் இந்திய அணி மற்றும் அஸ்வின் குறித்தும் பேசி உள்ளார்.

அதில் அவர் கூறியது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான டீன் எல்கர் அஸ்வின் மாயாஜால சூழல் தென்னாபிரிக்க அணியில் எடுப்படாது என தெரிவித்தார். காரணம் இந்தியா ஆடுகளத்தை விட தென் ஆப்பிரிக்கா ஆடுகளும் ஒப்பிடக்கூடாது அதற்கு எதிர்மாறாக கொண்டது.

அதிக சவால்கள் நிறைந்த ஆடுகளங்கள் தென்ஆப்பிரிக்காவில் இருக்கின்றன டெஸ்ட் தொடருக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம் எங்களது திட்டங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம் ஒவ்வொரு வீரரும் தங்களது திட்டங்களை வகுத்து வருகின்றனர் தனிப்பட்ட எந்த ஒரு வீரரையும் நம்பி இல்லாமல் ஒட்டுமொத்த அணியையும் வலுப்படுத்துவது சிறப்பாக இருக்கும் அதை நாங்களும் செய்து வருகிறோம்.

இந்திய அணி வலுவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் இந்திய அணி வலுவாக உள்ளது அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியுடனான ஆடுகளத்தில் அவரது சூழல் ஈடுபடாது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment