ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தால் போதாது முதலில் உங்க அம்மா, அப்பாவை மதிக்கணும் விஜய்.! விளாசிய பிரபலம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொழில் தொடங்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் முதலில் உங்க அம்மா அப்பாவை மதிக்கணும் அதுக்கப்புறம் ஊருக்கு உபதேசம் சொல்லுங்க என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறிய  தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது தற்பொழுது நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்க வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. வெளியான 10 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா மிகவும் கோலாகலமாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜயின் அப்பா, அம்மா இருவரும் பங்கு பெற்றார்கள். விஜயின் அம்மா, அப்பா ஒரு ஏக்கத்துடன் விஜயை பார்க்க விஜய் அவர்களை கண்டு கொள்ளாமல் கைகுலுக்கி விட்டு செல்கிறார். எனவே இதனை விமர்சனம் செய்த பைல்வான் ரங்கநாதன் முதலில் உங்க அம்மா அப்பாவை மதியுங்கள் இதனால் மக்கள் மத்தியில் உங்களுடைய பெருமை பிரபலமாகும்.

அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் சந்திரசேகரன் திருமதி ஷோபா சந்திரசேகரையும் முதலில் மதியுங்கள் என கூறியுள்ளார். ஏனென்றால் இந்த அளவிற்கு விஜய் வளர்வதற்கு முக்கிய காரணமே அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான். அதாவது தன்னுடைய மகனை வைத்து நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜயை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய மகனை கையைப் பிடித்து வந்து சினிமாவிற்கு அழைத்து வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.

மேலும் விஜய்க்காக பல லட்சங்களை முதலிடம் செய்தார் எனவே இவ்வாறு சினிமாவில் பிரபலமடைந்த விஜய் ஹீரோவானதற்கு பிறகு சுதந்திரமாக விட்டு விட்டார். இப்படிப்பட்ட தந்தையையும் தாயையும் பெரிதாக கண்டுகொள்ளாத விஜய் மாற வேண்டும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட அனைவருக்கும் அன்பை செலுத்துங்கள் என விஜய் கூறிய நிலையில் அதேபோல் விஜய் நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு அன்பை செலுத்துங்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment