இந்த காரணத்தினால் தான் கமலுடன் நடிக்கவில்லை – மனம் திறந்த நடிகை நதியா.!

இப்போ சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் எடுத்த உடனேயே கிளாமர் காட்சிகளின் நடிப்பது ஹீரோக்களுடன் முத்த காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதை வழக்கமாக்கி விட்டனர் ஆனால் ஒரு சில நடிகைகள் இதற்கு எதிர்மறாக இருக்கின்றனர் அந்த வகையில் நடிகை நதியா 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

இதுவரை அவர் நடிகர்களுடன் நெருக்கமான முத்த காட்சிகள் மற்றும் அரைகுறையான ஆடைகளில் இதுவரை நடித்ததே கிடையாது. அதனால் என்னவோ ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாக நடிகை நதியா இருந்தார். முதலில் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்த அறிமுகமானார்.

அதன் பின் சின்னதம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என பல்வேறு சிறந்த படங்களில் நடித்துள்ளார் மேலும் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ஆனால் கமலுடன் மட்டும் இதுவரை நடித்ததே இல்லை இது குறித்து அவரிடம் அண்மையில் கேட்கப்பட்டது அதற்கு நடிகை நதியா சொல்லி உள்ளதை நீங்களே பாருங்கள்..

கமலுடன் நடிக்காதது எனக்கும் வருத்தம் தான் சினிமா உலகில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் அவருடன் நடிக்க யார் நோ சொல்வார்களா. ஆனால் என்னால் முடியாமல் போனதற்கு கால்ஷீட் பிரச்சினை தான் காரணம் கமல் விக்ரம் படத்தின் முதல் பாகத்தில் முதலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நான் கமிட்டாகி இருந்ததால் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அப்பொழுது விட்டு விட்டேன் இனிய வாய்ப்பு வரலாம் என அவர் கூறினார். இதற்கிடையில் பாபநாசம் படத்தில் உங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது என கூறினார்கள் அதற்காக நதியா சொன்னது இதுவரை அப்படி என்னை யாரும் அணுகவில்லை அது வெறும் வதந்தி என கூறி முடித்தார்.

Leave a Comment