நடிகர் விக்ரம் சொன்ன வார்த்தையால் தான் – இன்று “மாமன்னன்” படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது.! உதயநிதி பேட்டி.

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் மாரிசெல்வராஜ்  பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்னும் படத்தை மிகத்தீவிரமாக உருவாக்கி வருகிறார் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார்.

ஹீரோயினாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஒரு நல்ல கருத்தை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன்பாகவே மாரிசெல்வராஜ் சியான் விக்ரமை வைத்து ஒரு கபடி சம்பந்தப்பட்ட ஒரு படத்தை உருவாக்கினார்.

அந்த படத்தின் சூட்டிங் முதல்கட்ட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாமன்னன் படத்தின் கதையை உதயநிதிக்கு சொல்ல உடனடியாக படமாக்கப்பட்டு வந்தது தான் இது குறித்து பேட்டி ஒன்றில் உதயநிதி சொன்னது. மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து கபடி சம்பந்த படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்காக உடல் எடையை செம பிட்டாக மாற்றி பயங்கரமாக ரெடியாக இருந்தார்.

சில காட்சிகள் எடுக்கப்பட்டது. திடீரென மரிய செல்வராஜ் உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தையும் இயக்கினார். இரண்டு படத்தையும்  ஒரே சமயத்தில் எடுக்க முடியாது என்பதற்காக மாரி செல்வராஜ் உடனடியாக சீயான் விக்ரமுக்கு போன் செய்து மாமன்னன் படம் எடுக்க வேண்டியதாக இருக்கிறது அதற்கான சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை எடுத்துவிட்டு வருகிறேன் பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி படத்தை எடுக்கிறேன் என கேட்டுக்கொண்டார் அதற்கு சியான் விக்ரம் தாராளமாக மாமன்னன் படத்தை எடுத்து முடித்து வாருங்கள் அடுத்ததாக இந்த படத்தை எடுங்கள் என கூறினார் அதனால் தான் மாமன்னன் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Comment