கீர்த்திசுரேஷ் நடித்து தேசிய விருது பெற்ற “நடிகையர் திலகம்” படத்தில் முதலில் நடிக்க இருந்த இரண்டு நடிகைகள் இவர்கள் தானாம் -வெளிவரும் உண்மை.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பானக படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்கள் மற்றும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டார் அதன் பிறகு இவருக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு கதையை சொல்லி வருகின்றனர்.

அதில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் இவர் சோலோவாக பென்குவின் என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் ஒரு நடிகையை வெற்றி எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்பதை சரியாக புரிந்துகொண்டு நடித்து வருகிறார்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிக்காட்டி அனைவரையும் அசர வைத்தார் இந்த படத்தில் துல்கர் சல்மானும் இருவரும் நடிப்பையும்  தாண்டி கதா பாத்திரமாக வாழ்ந்தனர் அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் தேசிய விருதை கைபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தற்போது தமிழ் சினிமாவிலும் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து பல பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களை கவர இன்ஸ்டா பக்கத்திலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் நடித்த நடிகையர்-திலகம் படத்தில் முதலில் இவருக்கு பதிலாக இருந்தது இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்தனராம்.

அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்தார் நிச்சயம் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக மாறி இருப்பார் என கூறப்படுகிறது அந்த நடிகை வேறு யாருமல்ல அமலாபால் தான். மற்றொருவர் நித்யா மேனன். ஆனால் இருவரும் தவிர்க்க பின் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்ததாம்.

Leave a Comment

Exit mobile version