என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இவருடன் ஒரு திரைப்படத்திலாவது நான் நடித்து விட வேண்டும்.! அதுவே எனது வாழ்நாள் ஆசை.! நடிகை ராசி கண்ணா பேச்சு.

தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி வருகிறார்களோ இல்லையோ ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு ஆடையை மாற்றிக் கொண்டு நடிக்கின்றனர் அந்த வகையில் தெலுங்கு ரசிகர்கள் மனநிலைக்கு ஏற்றமாதிரி உடையை அணிந்து நடித்ததன் மூலம் ரசிகர்களை இலகுவாக கவர்ந்து உள்ளவர் தான் நடிகை ராசி கண்ணா.

இவர் தெலுங்கில் தேர்ந்தெடுத்த நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் அனைத்து மொழிகளிலும் உருவாகத் தொடங்கியது அந்த வகையில் தமிழில் இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது கூட இவரது கையில் அரண்மனை3, துக்ளக் தர்பார், மேதாவி, சைத்தான் காபச்சா, சர்தார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் மிக சூப்பராக வளர்ந்து கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி அவர் தெலுங்கில் ஒரு சில படங்களும், ஹிந்தியில் இரண்டு வெப் சீரிகளிலும் நடித்து வருகிறார்.

ராசி கண்ணா என்னதான் திரைப்படங்களில் நடித்து இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை அள்ளி வீசுவதும் வழக்கம் அதனால் தற்போது தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராசி கண்ணா சமீபத்தில் பேசியபோது என்னுடைய நீண்ட நாள் ஆசையை தளபதி விஜயுடன் நடிப்பதுதான் அவருடன் நடிப்பதற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கூறி உள்ளார்.

Leave a Comment