கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த Vj சித்ரா மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆயிற்று..! கண்கலங்க வைக்கும் பதிவுகளுடன் ரசிகர்கள்..!

பொதுவாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் பிரபல சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த சித்ரா என்ற நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் பெரும்பாலும் ஒரு நடிகையை தங்களுக்கு பிடித்து விட்டால் அவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களை பேசுவதும் கொண்டாடுவதும் வழக்கமான ஒரு செயல்தான் அந்தவகையில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த vj சித்ராவின் நினைவு நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்று தந்தார்.

அந்த வகையில் இந்த சீரியல் பிரபலமாவதற்கு சித்ரா ஒரு முக்கிய பங்காக இருந்தது மட்டுமில்லாமல் அவர் அழகிலும் சரி நடிப்பிலும் சரி  மிகவும் சிறந்தவள் ஆக அமைந்தால் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த வருடம் இதே நாளில் நம்மை விட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திடீரென தற்கொலை செய்துகொண்டார் நமது நடிகை என்று வெளி வந்த தகவலை இன்றும் நமது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல்  இருந்து வருகிறார்கள் இந்நிலையில் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு பதிவு வெளியிட்டு வருகிறார்கள்.

vj-chithra

Leave a Comment

Exit mobile version