திருமண வாழ்க்கையை பற்றி மறைத்த இசைவாணி.! அவர்கள் தோழி என்ன கூறினார் தெரியுமா.! இசை வாணியின் கணவர் இவர்தானா

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மாலை மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் நமிதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கையாக இவர் கலந்து கொண்டார் ஆனால் இவர் நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறினார்.

இந்த சீசனில் பல புதுமுகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அவர்களில் ஒருவர் இசைவாணி. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பரிட்சயமான முகம் என்றால் விஜய் டிவி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, கனா காணும் காலங்கள்  ராஜ்மோகன்,  சின்ன பொண்ணு சீரியல் நடிகை பாவனி ரெட்டி இவர்களைத் தவிர பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் பலரும் தங்களின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பேசி இருந்தார்கள். அந்த வகையில் இசை வாணியும் தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறியிருந்தார். அதேபோல் இசைவாணி 2020ஆம் ஆண்டு தன்னுடைய கானா திறமை மூலம் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக  இவரைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது ஐபிசி.

அதேபோல் இசைவாணி கடந்து வந்த பாதையில் தனக்கு திருமணமானதை பற்றி கூறவே கிடையாது. ஆனால் பாவனி ரெட்டி திருமண வாழ்க்கை பற்றி கூறிய பொழுது அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் தனியாக தன்னுடைய திருமணம் பற்றி அவரிடம் கூறியுள்ளார் இந்த நிலையில் இசை வாணியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

isaivani

இவர்தான் இசைவாணியின் கணவரா என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இசைவானியின் நெருங்கிய தோழி ஒருவர் பேசிய பொழுது 2019ஆம் ஆண்டு டிரம்ஸ் கலைஞர் ஒருவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் அந்த டிரம்ஸ் கலைஞர் பெயர் சதீஷ் இந்த திருமணம வாழ்க்கை கண்டிப்பாக ஒத்துவராது என தெரிந்தும் எவ்வளவு இழுத்து பிடித்து பார்த்தார் ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

isaivani

விவாகரத்திற்கு பிறகும் மன அழுத்தத்தில் இருந்த இசைவாணி அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு நாங்கள்தான் கொண்டு வந்தோம் என தோழி ஒருவர் கூறினார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரின் மன அழுத்தத்தை சரிசெய்யும் என நினைத்தோம்  அதேபோல் ஒருவரின் திருமண வாழ்க்கை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது அதைப்பற்றி கூறுவதும் கூறுததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என கூறியுள்ளார்.

ஒருவேளை அவர் திருமண வாழ்க்கை பற்றி கூறி இருக்கலாம் அதை எடிட் செய்து கூட வெளியிட்டு இருக்கலாம் என அவரின் தோழி கூறியுள்ளார்.

isaivani

Leave a Comment

Exit mobile version