விடாமுயற்சி படத்தின் கதை இதுவா.? ஆசிரியராக நடிக்கும் அஜித்

Vidaamuyarchi : துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா போன்றவர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கவில்லை. நடிகர் அஜித்குமாருக்கு ஒரு பழக்கம் இருக்கு.. ஒரே ஒரு டேக் மட்டுமே நடிப்பார் அடுத்த டேக் அவருக்கு பிடிக்காது ஆனால் மகிழ் திருமேனி அதற்கு எதிர் ஆனாவர்.

இன்னும் 12 நாள் தான் இருக்கு.. பாக்கியாவை வான் பண்ணிட்டு போன முகமூடி அணிந்த நபர் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

படத்தின் காட்சியை நன்றாக வரும் வரை நடிகர், நடிகைகளை விடவே மாட்டார் நிறைய டேக் எடுப்பார் இதனால் இருவருக்கும் செட்டாகாது என கூறப்பட்டது ஆனால் அஜித்தோ படம் ரசிகர்களை கவர வேண்டும் அதற்காக எத்தனை டேக்குகள் வந்தாலும் நடிக்க ரெடி என கூறி நடித்துக் கொடுத்து வருகிறாராம்..

இந்த நிலையில் விடாமுயற்சி கதை இப்படித்தான் இருக்கும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அஜித் “உமர்  முக்தர்” கேரக்டரில் நடித்து வருகிறாராம் சாதாரண பள்ளி ஆசிரியராக அஜித் வருகிறார் அவருடைய ஏரியாவில் நடக்கும் பிரச்சனையை அஜித் எப்படி கையாளுகிறார் என்பது தான் படத்தின் கருவாக இருக்கும் என கிசுகிசுக்கபடுகிறது.

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றமா.? மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்

இந்த படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பு பாலைவனப் பகுதியில் தான் நடத்த வேண்டும் இதனால் கல்ப் நாடுகளில் ஷூட்டிங் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் அஜித்தின் விடாமுயற்சி படம் வெற்றி பெற இப்பொழுது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version