என்னடா சொல்றிங்க.. வாடிவாசல் படத்தின் கதை இதுவா.? செம்ம மாஸா இருக்கே

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து  இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்து  “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அவ்வபொழுது பாலாவுகும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது   முதலில் சின்ன சின்ன வருத்தம் பின் நாட்களில் பெருசாக வெடிக்க சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

அதை பற்றி பெருசா நினைக்காமல்  உடனடியாக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் ஒரு சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது இதனால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. சூர்யா 42  திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அது உறுதி செய்யவும் வகையில் சூர்யா ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் காளை மாடு உடன் பழகி வருகிறார் இதை வைத்து பார்க்கும் பொழுது தெரிகிறது சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் என்று.. இப்படி இருக்கின்ற நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் கதை இதுதான் எனக் கூறி ஒரு தகவல் உலாவி வருகிறது.

பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்த மீட்டிங் ஒன்றில் கலைப்புலி தாணு அவர்கள் “வாடிவாசல்” படம் குறித்து சில அப்டேட்களை கொடுத்துள்ளார். வாடிவாசல் படத்தின் பட்ஜெட் 200 கோடி என சொல்லப்படுகிறது. வாடிவாசல் படத்தின் கதை என்னவென்றால்  மிகவும் திமிருடன் இருக்கும் ஒரு காளை மாட்டை சூர்யா அடக்க வேண்டும் என்பதுதான்..

அந்தக் கதையை தத்துவமாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு திமிர் பிடித்த மாடு அதாவது அந்த மாட்டின் உறவினர்கள் கூட அந்த மாடு கிட்ட கூட போக முடியாதா அப்படிப்பட்ட மாட்டுடன் சூர்யா மூன்று மாதம் பழக வேண்டும் எனக் கூறியுள்ளனர் இதனால் படத்தின் சூட்டிங் தள்ளி போய் இருக்கிறதாம் இந்த வாடிவாசல் படம் சி. சு. செல்லப்பாவின் நாவல் தழுவி தான் படமாக வர இருக்கிறதாம்.

Leave a Comment

Exit mobile version