தளபதி 67 குறித்து அப்டேட் வெளியாகாமல் இருக்க இதுதான் காரணமா.? வெளியான தகவலால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் இருக்க இதுதான் முக்கியமான காரணம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வசூலில்நல்ல சாதனை படைத்துவரும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருக்கிறார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது அது மட்டுமல்லாமல் நடிகர் விஜயின் திரை வாழ்கையில் ஒரு அற்புதமான திரைப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் தற்போது இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் தளபதி 67 குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியே வராமல் இருக்க இதுதான் காரணம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லலித் தான் வாங்கி இருந்தார். அது மட்டுமல்லாமல்  தளபதி 67 திரைப்படத்தையும் இவர்தான் தயாரிக்க இருக்கிறார் இதனால் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியிட்டால் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டால். எங்கு வாரிசு படத்தின் வசூல் குறைந்து விடுமோ என்ற எண்ணிதளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தளபதி 67 அப்டேட் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் வெளியான பிறகுதான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டு வருகின்றனர்.

Leave a Comment