ஆத்தாடி இவ்வளவு சம்பளம் என்னால கொடுக்கமுடியாது என பிரபல நாடிகையை நிராகரித்த சங்கர்.! அப்போ இனி பிரமாண்டம்

தமிழ் சினிமாவிலும் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இவர் க்ரிக் பார்ட்டி கன்னட திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இயக்குனர் ஷங்கர் அவர்கள் தற்போது ராம்சரனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்கு ஆலியா பட், கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க பேச்சுவார்த்தை  நடந்தது.

இறுதியாக இந்த படத்திற்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கியாரா அத்வானி. கூடுதலாக இன்னொரு நடிகையும் இருக்கிறார். முதலில் இந்த வேடத்திற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவை ஷங்கர் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார்கள்.

rashmika

ஆனால் ராஷ்மிகா அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நிபந்தனைகளும் போட்டதாக தெரிகிறது. இதனால் சங்கர் அவர்கள் ராஷ்மிகா மந்தனாவை நிராகரித்து விட்டாராம். ராஷ்மிகா மந்தனா நடிக்கும் கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகையான அஞ்சலியை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Leave a Comment

Exit mobile version