சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான போட்டியில் ரோகித் சர்மா விளையாடமல் போனதற்கு முக்கிய காரணம் இதுதான்.? வருத்தப்படும் மும்பை ரசிகர்கள்.

ஐபிஎல் இரண்டாவது பாதி நேற்று கோலாகலமாக தொடங்கியது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறுதலாக பொல்லார்ட் கேப்டன்ஷிப் செய்தார்.

இதுகுறித்து கேப்டன் பொல்லார்ட்டிடம் அப்பொழுது  கேட்கப்பட்டது அதற்கு  ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை இன்று ஒருநாள் கேப்டனாக நான் இருப்பேன் என தெரிவித்தார். அணியில் இடம்பிடிக்காதற்க்கு முக்கிய காரணம் இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு  பல காயங்கள் ஏற்பட்டது.

அதனால் அன்றைய போட்டியிலேயே அவர் பீல்டிங் செய்ய வரவில்லை காயம் மேலும் பெரிதாகி விடும் என்பதால் அவர் அதிகமாக பிரக்டிஸ் செய்யவில்லை மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட வில்லை என கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா நேற்று இடம்பெறாதது.

ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை சோர்வடைய செய்தது. எப்பொழுது வேண்டுமானாலும் விஸ்வரூபமெடுக்கும் ரோகித் சர்மா அணியில் இருந்திருந்தால் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் போட்டியில் வெற்றியை ருசிக்க முடியும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

rohit sharma
rohit sharma

ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை அதனாலேயே முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை வெகுவிரைவிலேயே அவர் முழு உடல் தகுதியுடன் அன்று மற்ற போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதோடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment