உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் இதுவா.? நடிப்பதை நிறுத்த போகிறாரா.? பேட்டியில் அவரே சொன்ன திடுக்கிடும்.!

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமா உலகில் கால்தடம் பதித்து வெற்றிகளை குவிக்க முடியும் அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக கால் தடம் பதித்து  தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, கெத்து, கண்ணே கலைமானே, சைக்கோ போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் களமிறங்கி தற்பொழுது வெற்றிகளை அள்ளி வருகிறார்.

இதனால் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார் இவர் ஒருபக்கம் இப்படி பயணிக்க மறுபக்கம் இவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் படங்களையும் தயாரித்து அசத்துகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

குறித்து சிவகார்த்திகேயன் கூறியது உதயநிதி தான் உண்மையான தமிழ் சினிமாவில் டான் என குறிப்பிட்டு பேசினார். உதயநிதி ஸ்டாலின் சினிமா உலகில் நடிப்பதை நிறுத்த போவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவர் கையில் தற்பொழுது நெஞ்சுக்கு நீதி மற்றும் மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படம் பண்ணி வருகிறார்.

முதலாவதாக நெஞ்சுக்கு நீதி படம் ரிலீசாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கிறார் இதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதன்பின் முழுநேர அரசியல்வாதியாக உதயநிதி ஸ்டாலின் மாறுவார் என கூறப்படுகிறது.

Leave a Comment