WTC இறுதி போட்டியில் ரோஹித் சர்மாவின் வேலை இது தானாம்.? பயத்தில் NZ வீரர்கள்.

இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதற்காக இந்திய அணி தற்போது வளர்ச்சியை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற முன்னணி வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியை வெற்றி பெறுவதற்கான அனைத்தும் இந்திய அணியிடம் இருக்கிறது.

இந்த போட்டியில் ஆட்டத்தின் மாற்றத்தை தொடக்கத்திலேயே கொடுக்க ரோஹித் சர்மாவை தற்போது எடுத்துள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா முதல் 20 ஓவர்கள் நின்றுவிட்டால் அதன் பிறகு எதிரணியை மிகப்பெரிய அளவில் சின்னா பின்னமாகும் திறமை ரோகித் சர்மாவிடம் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் எடுத்த உடனேயே பந்தை அடிப்பார். ஆனால் ரோகித் சர்மா குறைந்தது 10 அல்லது 20 ஓவர்கள் தாக்கு பிடித்து விட்டால் அது பந்து கூட இவரது பேச்சைக் கேட்கும் அந்த அளவிற்கு பந்தை நாலாபக்கமும் பறக்க விடுவதில் மிகவும் பலம் வாய்ந்தவராக கருதப்படுகிறார் இதனால் வருகின்ற நியூசிலாந்து மற்றும் இந்தியாவுடனான டெஸ்ட் இறுதி போட்டியில் ரோகித் சர்மாவின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்குமென கருதப்படுகிறது.

எடுத்தவுடனேயே எதிரணி வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற அடிப்பதால் அந்த பவுலர்கள் சூழ் நிலையை மாற்றிக் கொள்வார்கள் அதன் பின் வருகின்ற கோலி. புஜாரா அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் இதனால் இந்திய அணி மிகப் பெரிய ஒரு ஸ்கோரை எட்ட முடியும் என கணக்குப் போட்டுள்ளது ஆக மொத்தத்தில் நியூசிலாந்தை ஆட்டம் காணவைக்க ரோகித்சர்மா கட்டாயம் தேவைப்படுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

rohit sharma
rohit sharma

பிற மண்ணில் மிகப்பெரிய அளவில் சோபிக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் எதையும் மிகப்பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் எதிரணி வீரகளுக்கு அச்சுறுத்தலான காட்ட கூடிய வீரராக  இருப்பார் என எதிர் பார்க்க படுகிறது.

Leave a Comment