நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு காரணம் இந்த பிரச்சனைதனா.! வெளியான அதிர்ச்சி தகவல்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து ஏன் வெளியேறினார் என்ற காரணம் தெரியாமல் பலரும் பல வதந்திகளைக் கூறி வந்தார்கள். ஆனால் தற்பொழுது உண்மையான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிமுகமானது.

கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 மற்ற சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது பல்வேறு மாற்றங்கள் பிக்பாஸ் சீசன் 5 உள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் 18 போட்டியாளர்கள்.  அதோடு மற்ற சீசன்களில் பல விஜய் டிவி பிரபலங்கள் இருந்தனர் ஆனால் இந்த சீசனில் முகம் தெரியாத ஏராளமானவர்கள் களம் இறங்கி உள்ளார்கள்.

இதற்காகவே ரசிகர்கள் மற்ற சீசன்களை விடவும் இந்த சீசனுக்கு தங்களது பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அதோடு இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். ஆனால் இந்த சீசனில் பிரியங்கா, சின்னதம்பி, பவானி, நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு, கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் அர்ஜூன் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி போன்ற சிலர் மட்டுமே விஜய் டிவியில் பணியாற்றி உள்ளவர்கள் இவர்களை தவிர மீதி உள்ள அனைவரும் முகம் தெரியாதவர்கள்.

இதோடு முக்கியமாக பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையான நமிதா மாரிமுத்து அறிமுகமாகியிருந்தார். இவர் கடந்த டாஸ்கில் பேசியது அனைவரையும் கலங்க வைத்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது விடா முயற்சியினால் தற்பொழுது தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இதன்மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

ஏன் என்ற காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நமிதாவிற்கு தீவிரமான தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் வலியால் துடித்ததாகவும் பனிமலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது ஓரளவிற்கு உடல் நலம் சரியாகி உள்ளதால் சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளாராம்.  உடல் நலம் சரியானவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கு பெறுவாரா மாட்டாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment