டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் இப்படி தான் இருக்க வேண்டும்.? மனம் திறந்து சொன்ன சல்மான் பட்.

சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதியது இதில் இந்திய அணி சொல்லிக்கொள்ளும்படி பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கில் சரி   தனது திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டது. இதனால் மிக சுலபமாக NZ அணி வெற்றிக்கனியை பறித்து.

இந்திய அணி இந்த போட்டியை அசல்டாக கோட்டை விட்டதால் கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் இந்திய அணியை தாறுமாறாக பிடித்து வருகின்றனர். மேலும் இதில் சிறப்பான வீரராக கருதப்பட்ட புஜாரா, விராட் கோலி, ரோகித் போன்றவரும் சொல்லிக்கொள்ளும்படி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தால் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இது இப்படி இருக்க அடுத்ததாக ஜூலை 4-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சல்மான் பட் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா குறித்து சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தற்போது காலூன்றி உள்ளார் அவர் ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தனது  திறமையை தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்திவரும் ரோகித் ஷர்மா மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை காட்டுவார் என பலரும் கூறுகின்றனர்.

rohit
rohit

அது உண்மைதான் ஆனால் அதிக பந்துகள் நின்று பிறகு அவுட் ஆக்குவது பலரையும் கஷ்டப்படுத்தும் ஒரு சிறந்த ஆட்டக்காரர் இதுபோன்று நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக கூறுகிறது அந்த விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் ரோகித் அதை சரி செய்து கொண்டு தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் சல்மான் பட் இச்செய்தி தற்போதைய சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment