விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் இனி இந்தப் பிரபலம் தான்.? யார் அது தெரியுமா.?

சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த தொடரில் 1 பாக்கியலட்சுமி இந்த சீரியல் ஒரு இல்லத்தரசி பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் சமாளித்து வரும் பிரச்சனைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை எடுத்துரைத்து வருகின்னர்.

தற்போது இந்த சீரியலில் திருமணமாகி 25 வருடங்களை கடந்த நிலையில் பாக்கியாவின் கணவர் கோபி அவரது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். மேலும் இனிவரும் எபிசோடில் விவாகரத்து பெறுவதற்காக கோபி பாக்கிய லட்சுமியை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு ஜட்ஜ் கேட்கும் கேள்விக்கு பாக்கியலட்சுமி வெகுளித்தனமாக பதில் சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன் வேறு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளாராம். ஆரியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசையாம் அதனால் இந்தச் சின்ன ரோலில் நேரத்தை செலவிடுவதை அவர் வீணாக நினைக்கிறார் என்பது போல தெரிகிறது.

அதனால் இந்த சீரியலில் இருந்து வெளியேறி வேறொரு சீரியலில் கதாநாயகனாக அல்லது சினிமாவில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என தகவல் வெளிவந்துள்ளது இதனிடையே இந்த தொடரில் செழியன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக பார்க்கப்படுவதால் ஆர்யனுக்கு பதில் வேறு ஒரு பிரபலம் கண்டிப்பாக மாற்றப்படுவார்.

தற்போது நமக்குக் கிடைத்த தகவல் படி இனி செழியன் கதாபாத்திரத்தில் நடிக்க ராஜபார்வை சீரியலில் நடித்து வந்த விகாஷ் சம்பத் என்ற பிரபலம் தான் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது புகைப்படமோ இன்னும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version