ஆதவன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.? அப்போ சூர்யாவுக்கு எழுதியது இல்லையா இந்த கதை..

நடிகர் சூர்யா தற்பொழுது பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரின் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவதால் இவரது ரசிகர்களும் இவர் நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் ஆதவன் கடந்த 2009 இல் வந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சூர்யா,நயன்தாரா,வடிவேலு போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தின் கதையை நடிகர் ரமேஷ் கண்ணா தான் எழுதினார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது இந்தத் திரைப்படத்தின் கதையை நடிகர் விஜயகாந்த் தான் முதலில் நடிக்க அவர் எழுதினாராம் ஆனால் அப்பொழுது கே.எஸ்.ரவிக்குமார் சூர்யா மற்றும் ரெட்ஜெயண்ட் கூட்டணி சேரும் புதிய திரைப்படத்திற்கு கதை தேடி வந்தாராம்.

surya

அந்த நேரத்தில் ரமேஷ் கண்ணா இந்த கதையை கூற இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாருக்கும் பிடித்து விட்டதால் அதன் பின்பு சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர்களிடமும் கதை கூறிய பொழுது கதை மிகவும் பிடித்து விட்டது உடனே ஷூட்டிங் போகலாம் என கூறிவிட்டார்களாம் இந்த தகவலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியுள்ளதாக தற்பொழுது வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version