அடிமேல் அடி வாங்கும் ஷங்கர்.! பிரம்மாண்ட இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் திரைப்படம் என்றாலே பெரிய பட்ஜெட்டில் எடுத்தாலும் அதைவிட நல்ல வசூலை பெற்றுத்தந்து ரசிகர்கள் மனத்தில்  இடம் பிடித்தவர்.

சினிமா துறையில் அவருடைய இளைய மகள் நடிகையாக நடிக்க உள்ளார். மேலும் அவர் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது மகள் திருமண நேரத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக இருந்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மட்டும் தான் கலந்து கொண்டார்கள்.

ஆகையால் இவரது மகளின் ரிசப்ஷன் சென்னையில்  பல கோடி செலவு செய்து பல்வேறு ஏற்பாடுகள் செய்த நிலையில் இயக்குனர் ஷங்கரே இந்த ரிசப்ஷனை கடைசி நேரத்தில்  நிறுத்தியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அவரது மருமகனால் இந்த ரிசப்ஷனை நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவர் மருமகன் கிரிக்கெட் பயிற்சியாளர் ரோகித்திடம் பயிற்சி பெற்ற பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். மேலும் அந்த பெண் கம்ப்ளைன்ட் கொடுத்தார் அதனால் ரோகித்தின்  மீது போக்சா சட்டம் பாய்ந்தது.

இயக்குனர் ஷங்கர் குடும்பம் அந்த விஷயத்தைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். ஐஸ்வர்யாவுக்கும் மற்றும் ரோஹித்க்கும் விவாகரத்து வாங்கும் வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

மேலும் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்தால் மட்டும் தான் விவாகரத்து பதிவு செய்யவும் முடியும் என்று இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் விவாகரத்துக்கு பதிவு செய்யலாம் என இயக்குனர்  சங்கர் குடும்பத்திடம் கூறியுள்ளார் இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக பலகோடி செலவு செய்ய பட்ஜெட் போட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்துள்ளார் அதைப்பார்த்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் உங்க பிரம்மாண்டம் எல்லாம் இங்கே வேண்டாம் படத்தை பட்ஜெட்டுக்குள் எடுங்க இல்லன்னா உங்க சம்பளத்துல கைய வைக்க வேண்டியிருக்கும் என கடுமையாகப் பேசி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படி சங்கருக்கு அடிமேல் அடி விழுந்து வருவதால் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்.

Leave a Comment