இரவின் நிழல் படத்தில் வந்துப்போன “கழுதைக்கு” இத்தனை லட்சம் சம்பளமா.? பார்த்திபன் சொன்ன சுவாரசிய தகவல்.

சினிமாவில் நடிகராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் பார்த்திபன் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார். எப்பொழுதும் கூட நடிகர் பார்த்திபன் தான் இயக்கம் படங்களில் நடித்தும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

மேலும் முக்கியத்துவம் உள்ள கதைகள் வந்தால் அந்த படங்களிலும் நடிக்கிறார் அப்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக நல்ல வசூலும் அள்ளி வருகிறது. முதல் நாளில் 90 லட்சம் வசூல் செய்த இரவு நிழல் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் அதிக வசூலை அள்ளி உள்ளது இதனால் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளித்தான் இந்த படம் நிற்கும் என படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் சொல்லி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில்  இயக்குனர் பார்த்திபன் இந்த படம் குறித்து பல்வேறு பேட்டிகளில் பல விஷயங்களை கூறி வருகிறார் அப்படி இந்த படம் குறித்து ஒரு பேட்டி ஒன்றில் சொல்லும் பொழுது குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அதற்காக பார்த்து பார்த்து படத்தை எடுப்பேன் இருப்பினும் ஏதோ ஒரு வகையில் பட்ஜெட் அதிகமாகி விடுவதாக கூறினார்.

இப்படித்தான் இந்த படத்தில் ஒரு சம்பவமும் நடந்துள்ளது அதாவது ஒரு கழுதை வந்து போகும் அதற்கு மட்டுமே சுமார் ஒன்பது லட்சம் சம்பளம் கொடுத்துள்ளதாக கூறினார். இரவின் நிழல் படத்திற்காக கழுதையின் கால்சிட்டு சுமார் 90 நாட்கள் கேட்கப்பட்டது. அதற்கு அந்த கழுதைக்கு சம்பளமாக சுமார் ஒன்பது லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி அதிர வைத்தார்.

Leave a Comment