தளபதி 68 திரைப்படத்தை இந்த இயக்குனர் தான் இயக்கப் போகிறாரா.? ஐய்யயோ அவரா வேண்டவே வேண்டாம் என கதறும் விஜய் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடிக்க வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. இருந்தாலும் இந்த படத்தின் பற்றி தற்போது வரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாத நிலையில் மேலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள். பொதுவாக இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் ரசிகர்கள் வாரிசு படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் நிலையில் தளபதி 67 படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதாவது விஜய்க்காக மிகவும் அதிகமாக யோசித்து அவருக்கு ஏற்றார் போல் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதையை உருவாக்க இருப்பதாகவும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் மிரட்டலான படமாக இருக்க வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளாராம்.

அந்த வகையில் இந்த படத்தில் 6 வில்லன்கள் விஜய்யுடன் மோத உள்ளதாகவும் சஞ்சய் தத், பிருத்திவி, கௌதமேனன் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் திரிஷா, சமந்தா இரு நடிகைகளுமே கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தின் அறிவிப்பை தற்பொழுது வரையிலும் உறுதி செய்யப்படாமல் இருந்து வரும் நிலையில் தளபதி 68 படத்தினைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதாவது விஜய், அட்லி இவர்களுடைய கூட்டணியில் மீண்டும் படம் உருவாக இருப்பதாகவும் அந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக விஜய் அட்லி இவர்களுடைய கூட்டணியில் தெரி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ள நிலையில் சமீப பேட்டி ஒன்றில் இது குறித்து அட்லி மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் பான் இந்தியா படமாக உருவாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது தற்பொழுது அட்லி ஷாருக்கான்னை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார் இந்த படத்தினை முடித்துவிட்டு விஜயை படத்தினை இயக்குவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment