சிம்புவுக்கு ஜோடி நயன்தாராவா.. அதெல்லாம் முடியாது என ஒற்றை காலில் நின்ற இயக்குனர்.! கடைசியாக நடித்தது யார் தெரியுமா.?

Nayanthara : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வருவர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மலையாள நடிகையான இவர் தமிழில் “ஐயா” படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு திறமையையும், அழகையும் காட்டி அசத்தினார்.

அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்து நடித்த சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா சிவாஜி த பாஸ் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்று பெரும் நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார். திரையுலகில் ஜொலித்த நயன்தாரா நிஜ வாழ்க்கையில் பல சிக்கல்களில் சிக்கினார் ஆம் சிம்புவுடன் கிசுகிசு பிரபுதேவா உடன் கல்யாணம்வரை சென்றது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதிலிருந்து வெளிவர நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை காதலித்தார் இந்த ஜோடி 7 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர் இப்போ சினிமா, குடும்பம் என அனுபவித்து வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் நயன்தாராவை சிம்பு பட இயக்குனர் ரிஜெக்ட் செய்தது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது சிம்பு நடிப்பில் உருவான தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நயன்தாரா தானாம்.. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் ஆடிஷனில் நயன்தாராவுக்கு சரியாக நடிப்பு வரவில்லை என கூறி ரிஜெக்ட் செய்து விட்டாராம்.. பிறகு கோபிகாவை நடிக்க ஒப்பந்தம் செய்தாராம் தொட்டி ஜெயா படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

அவர் நயன்தாரா சரத்குமாருடன் நடித்த ஐயா படம் மிகப்பெரிய ஹிட் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தார் அதுவும் பெரிய ஹிட் எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எவ்வளவு எடுத்துச் சொல்லி கேட்டாராம் ஆனால் இயக்குனர் சம்மதிக்கவே இல்லையாம். இது எப்படியோ நயன்தாரா காதுக்கு  சென்று விட்டது பிறகு கடுமையாக உழைத்து தனது நடிப்பு திறமையை காட்டி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

Leave a Comment