அப்பாவின் ஆசையை நிறைவேற்ற தயங்கும் நயன்தாரா.? விக்னேஷ் சிவன் எதாவது சொல்வாரா.? ஷாக்காக்கும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவர் நயன்தாரா.    சினிமாவில் இன்று வரையிலும் யாரும் நெருங்க இடத்தை தன்வசப்படுத்தி உள்ளார். அந்த அளவிற்கு  பேரும்,புகழையும் சம்பாரித்து உள்ளதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து படங்களை வாரி குவித்து நடித்து வருவதால் இவரது மார்க்கெட் வேற லெவெலில் இருந்து வருகிறது.

இவர் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் காதல் என்ற வலையில் பலமுறை சிக்கியதால் சின்னாபின்னமாகியும் போனார். ஒரு வழியாக நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது விக்னேஷ் உடன் ஏற்பட்ட காதல் தற்போது வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது இது நயன்தாரா ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் இருவரும் பிரிந்து விடக்கூடாது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டு வந்தனர்.

பல வருடங்களாக பதிலளிக்காத விக்னேஷ் சிவன் சமீபகாலமாக ரசிகர்களுடன் உரையாடும்போது பல உண்மைகளை போட்டு உடைத்து வந்து கொண்டிருக்கிறார் இப்படி இருக்க சமீபத்தில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் கொச்சின் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் சில விஷயங்களும் தற்போது கிடைத்துள்ளது அதாவது இருவரும் கொச்சின் செல்வதற்கு முக்கிய காரணம் நயன்தாராவின் தந்தையின் உடல்நிலை குன்றியதால் வேறுவழியில்லாமல் அவசரவசரமாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் புறப்பட்டு சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது நயன்தாராவை தனியாக கூப்பிட்டு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் உன்னை அந்த கோலத்தில் பார்க்க வேண்டும் என கூறி உள்ளார் இது இப்போதுதான் கூறி உள்ளார் என்றால் இல்லை இது போன்று பல முறை நயன்தாராவிடம் அவரது அப்பா கூறியுள்ளார்.

தற்போதும் பொழுது கூட திருமணம் குறித்து  சொல்லி உள்ளார் அதற்கு நயன்தாரா ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறி உள்ளது நல்ல செய்தியாகவே தற்போது பார்க்கப்பட்டுள்ளது இதனால் அவரது அப்பாவின் ஆசையை வெகுவிரைவிலேயே நிறைவேற்றுவார் எனவும் கூறுகின்றனர்

Leave a Comment

Exit mobile version