நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகைவுடன் நெருக்கமாக பழகுவது உண்மையா.? பத்திரிகையாளர் கூறிய தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தமிழ்நாட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய் அவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரின் நடைபெற்று வருகிறது எனவே தொடர்ந்து நடிகர் விஜய் பற்றிய பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைட்டலாகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் அதற்கு காரணம் விஜயும் கீர்த்தி சுரேஷ் மிகவும் நெருக்கமாக பழகி வருவதால் தான் என பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வதந்திக்கு மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது அவர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடினார் ஆனால் சில மீடியாக்கள் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்ததாக கூறி வருகின்றனர் இது முற்றிலும் பொய் மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

சில காரணங்களால் விஜய் மீடியாவை தவிர்த்து வருகிறார் இந்த வெறுப்பில் தான் மீடியாக்கள் விஜய் மீது மிரட்டல் விடுகிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இவ்வாறு பிரபல புகழ்பெற்ற நடிகர் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது தவறான ஒன்று என விஜய் ரசிகர்கள் கடுப்பிலிருந்து வருகின்றனர்.

Leave a Comment