கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலைமைக்கு இவர் தான் காரணமா.? வெளியான அதிர்ச்சி தகவல்…

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு இவர்தான் காரணம் எனாத தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு அவர் மது அருந்தியது தான் காரணம் என சிலர் கூறி வந்தார்கள். ஆனால் அது பொய் என பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கேப்டனாக கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த் இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜயகாந்திற்கு சமீபத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இந்த நிலையில் இவருடையா உடல் நிலை பாதிக்கபட்டதற்கு காரணம் என்ன என்பதை இயக்குனர் பிரவீன் காந்த் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு விஜயகாந்தின் உயிருக்கு உயிரான நண்பரான ராவுத்தர் இறந்து விட்டார் இவர் இறந்த போது நானும் அங்கே இருந்தேன் அதுமட்டுமல்லாமல் ராவுத்தர் இறுதிச் சடங்கிற்கு விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது அவரின் உடலை பார்த்து அழக் கூட முடியாமல் தன்னை மறந்து ராவுத்தையே பார்த்துக் கொண்டே இருந்தார்.

ராவுத்தர் இறப்பதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த்திர்க்கும் ராவுத்தருக்கும் இடையே சில மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர். அதன் பிறகு ராவுத்தர் இறந்து விட்டார். கடைசி வரைக்கும் தன்னுடைய நண்பருடன் இல்லாமல் இருந்ததால் தான் விஜயகாந்த் இந்த நிலைமைக்கு வந்திருக்க காரணம் எனக்கு கூறி இருக்கிறார்.

தன்னுடைய நண்பன் இறந்துவிட்டதால் அவரையே நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி தான் விஜயகாந்தின் உடல்நிலை இப்படி ஆனது என்று கூறியுள்ளார். விரைவில் விஜயகாந்த் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மக்களும் கூறி வருகின்றனர்.

Leave a Comment