விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படத்தை எடுக்கப்போகுவது இவரா.? ஆசையுடன் கேட்டுக் கொண்ட மக்கள் செல்வன்.!

தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து திறமையை வளர்த்துக் கொண்டு  ஒரு கட்டத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்த பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ஏனென்றால் ஹீரோ என்ற அந்தஸ்தை தாண்டி நாம் வேறு ஏதாவது கதாபாத்திரத்தில் நடித்தால் தனது மார்க்கெட் சரிந்து விடும் என்ற பய உணர்வு இருக்கிறது.

ஆனால் அதை உடை தெரிந்தவர் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் விஜய் சேதுபதி தொடர்ந்து ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தொட முடியாத ஒரு உச்சத்தை எட்டி உள்ளார். தற்போது இவருக்கு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் தெலுங்கில் இரண்டு மூன்று படங்களையும் ஹிந்தியில் நான்கு படங்களையும் கைவசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

விஜய் சேதுபதி அண்மைக்காலமாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  காரணம் இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் படத்தில் பவானியாகவும், விக்ரம் படத்தில் சந்தானமாகவும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதன் காரணமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க போட்டி போடுகின்றனர் அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி தனது 50ஆவது திரைப்படத்தை இந்த இயக்குனர் தான் இயக்க வேண்டும் என ஆசையாக கேட்டுக் கொண்டுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல தர்மதுரை, மாமனிதனாகிய திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி தான் தனது 50 வது திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம் மேலும் அந்த படம் தர்மதுரை 2 படமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இச்செய்தியை வலைப்பேச்சு நண்பர்கள் பேசிக்கொண்டனர்.

Leave a Comment