கேப்டன் விஜயகாந்த் இப்படிப்பட்டவரா.? நமக்கு தெரியாத விஷயங்கள்

Vijayakanth : ஆக்சன் படங்களில்  சிறப்பாக நடிக்க கூடியவர் கேப்டன் விஜயகாந்த் இவர் நடித்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, வாஞ்சிநாதன், நரசிம்மா என சொல்லிக்கொண்டு போகலாம் அந்த அளவிற்கு படங்களில் நடித்தவர் தொடர்ந்து வெற்றி மட்டுமே கண்டு வந்த இவர் திடீரென அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அங்கேயும் வெற்றிகளை மட்டுமே குவித்த விஜயகாந்துக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போக தற்பொழுது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை இங்கு பார்ப்போம்..

நாலா பக்கமும் கொட்டும் பணம்.. கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

1. விஜயகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்பதை பல தடவை நிரூபித்திருக்கிறார் அதாவது தன்னுடைய படப்பிடிப்பில் தான் என்ன சாப்பாடு சாப்பிடுகிறானோ அதைத்தான் மற்ற நடிகர்கள் தொடங்கி லைட் மேன் வரை சாப்பிட வேண்டும் என நினைக்கக்கூடிய ஒரே நடிகர் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு நேரடியாக  காசை கொடுக்கப் பார்ப்பார் வாங்க மறுப்பவர்களை சீட்டாடி தோற்பது போல்  அவர்களுக்கு அந்த காசை கொடுப்பார்.

பருத்திவீரன் படம் : கார்த்தி ஒருவரால் ஹிட் அடிக்கவில்லை – உண்மையை உடைத்த கஞ்சா கருப்பு

3. தமிழ் சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா, தளபதி விஜய் போன்றவர்களுக்கு ஒரு ஏணியாக இருந்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

4. விஜயகாந்த் தன்னுடன் நடித்த சக நடிகர் யாராக இருந்தாலும் அவர்களை வளர்த்து விடுவார் அந்த வகையில் மன்சூர் அலிகான், பொன்னம்பலம், ராதாரவி என பல நடிகர்களை வளர்த்து விட்டுள்ளார் மேலும் அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் காசுகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. மதுரையில் கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு வரும்பொழுது நடிகர் நடிகைகள் அனைவரும் சாப்பிடவில்லை இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் ரயிலை நிப்பாட்டி அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து சாப்பிட்ட பிறகு தான் ரயிலேயே எடுக்க சொன்னார்.

6. காஸ்ட்யூம் டிசைனர் ஒருவர் தங்களுடைய யூனியன் கட்டிடத்தை கட்ட ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது என்று விஜயகாந்திடம் கூற இன்னும் எவ்வளவு தொகை தேவை என்று ஒரு கணக்கு புத்தகத்தை விஜயகாந்திடம் கொடுத்துள்ளார் சற்று நேரம் புத்தகத்தைப் பார்த்த விஜயகாந்த் அந்த பெரிய தொகையை நானே மொத்தமாக தருகிறேன் என கூறி யாரிடமும் நிற்க வேண்டாம் என கூறினாராம்.

இப்படி விஜயகாந்த் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் நாளோ அல்லது வாரமோ பத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.