மீண்டும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடிக்க போகிராறா.. பிக்பாஸ் ராஜு.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நடிகர் மற்றும் நடிகையாக செந்தில் மற்றும் ரக்ஷிதா நடித்து வந்தன. மேலும் இதில் நடிகை ரக்ஷிதா வேறு சில வாய்ப்பின் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறிய..

நிலையில் அவருக்கு பதில் தற்போது அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வந்த நடிகை நடித்து வருகிறார்.  இந்த சீரியலில் ஹீரோவின் நண்பனாக மற்றும் காமெடி நடிகராக கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜுவிற்கு இடையில் பிக் பாஸ் சீசன் 5 வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

மேலும் சீரியலின் இயக்குநர் ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு மீண்டும் இந்த தொடரில் நடிப்பார் என்ற எண்ணத்தில் கத்தி கதாபாத்திரத்திற்கு வேற.. பிரபலம் யாரையும் மாற்றாமல் அவர் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வது போன்று கதை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி மக்கள் மற்றும் சக போட்டியாளர்களை என்டர்டைன்மென்ட் செய்து  டைட்டிலை வென்று வெளியேறிய ராஜு தற்போது வெள்ளித்திரையில் நடிகர், இயக்குனராக இணைவாரா அல்லது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்கள் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த கேள்வியை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ராஜுக்கு ஜோடியாக நடித்து வந்த காயத்திற்கும் ஏற்பட்டுள்ளது அதற்கு தற்போது ராஜு பதிலளித்துள்ளார். அது என்னவென்றால் நான் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் நான் வரும் காட்சிகளை ஒரு வாரங்களுக்கு சஸ்பென்சாக வைத்திருங்கள் என ஜாலியாகவும் கூறியுள்ளாராம்.

Leave a Comment