மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு போக போகிறாரா.. நமிதா மாரிமுத்து.? அவரே கூறிய சூப்பர் தகவல்.

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த மாதம் பிக்பாஸ் சீசன் 5 சிறப்பாக தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை கமலஹாசன் செம்மையாக தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

அதிலும் நேற்று சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் சுருதி வெளியேறிவிட்டார். சுருதி பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக அவருக்கும் தாமரைக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மனக்குழப்பத்திலேயே மிகவும் அமைதியாகவே இருந்தார். நேற்று பிக்பாஸ் வீட்டில் கமல் பிறந்த நாளை முன்னிட்டு போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்ற வாரம் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அணிக்கு இன்றைய எபிசோடுகளில் போட்டிகள் நடை பெறுவதாக முதல் மற்றும் இரண்டாவது ப்ரோமோவில் வெளிவந்தன மேலும் மூன்றாவது ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது.

அதில் ராஜு மற்றும் பிரியங்காவை பலரும் நாமினேட் செய்யப்படுகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறியபடாத சில காரணங்களால் வீட்டிற்க்கு வந்த ஆறாவது நாளிலே வீட்டை விட்டு வெளியேறியவர் நமீதா மாரிமுத்து.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒன்றாக நமிதா பிக் பாஸ் 5இல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வாரா என்ற கேள்விக்கு இதை நீங்கள் பிக்பாஸ் இடம் தான் கேட்க வேண்டும் என பதில் கூறினார் நமிதா மாரிமுத்து.

Leave a Comment