நடிகை நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு இடத்திற்கு செல்ல போகிறாரா.? அதுவும் இந்த பிரபலங்களை பின்பற்றி தான்.!

தமிழ் திரை உலகில் நடிகைகளில் அதிகம் நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும் தான் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகியிருந்தாலும் இவர் சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,சமந்தாவுடன் இவர் விருவிருப்பாக இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் காதலித்து வரும் விஷயம் உலகம் முழுவதும் தெரிந்து விட்டது என்று தான் கூற வேண்டும் கூடிய சீக்கிரம் தனது காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார் அதை விட சிறந்த வீடு கிடைக்கிறதா என்பதையும் தேடி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் போயஸ் கார்டனில் எழும்பி வரும் பிரம்மாண்ட அப்பார்ட்மென்டில் இரண்டு பிளாட்டை நயன்தாரா புக் செய்துள்ளாராம்.

nayanthara
nayanthara

மேலும் அதில் இரண்டுமே 4 படுக்கை அறைகள் கொண்டதாக இருக்கும் எனவும் தகவல் வைரலாகி வருகிறது அந்த அப்பார்ட்மெண்ட்டில் கட்டிடம் கூடிய சீக்கிரம் முடியப் போகும் நிலையில் இருப்பதால் கல்யாணத்திற்கு பிறகு நயன்தாரா அங்கே குடியேற தயாராகி வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அங்கு நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவரைப் பின்பற்றி பல பிரபலங்களும் தற்பொழுது போயஸ் கார்டனில் வாசித்து வர முடிவு செய்துள்ளார்கள்.

Leave a Comment