எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கதறும் சுரேகா வாணி.! பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு இது தேவைதானா?

நடிகை சுரேகா வாணி ஆதரவற்ற குற்றங்களை தவிர்க்கவும் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சுரேகா வாணி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சின்னத்திரையின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

மேலும் சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது தெலுங்கு திரைவுலகில் மீண்டும் போதை பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கே.பி சவுத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது போன் டேட்டா மற்றும் போட்டோக்கள் மூலம் பல நடிகைகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதில் அசு ரெட்டி, ஜோதி, சுரேகா வாணி உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆனால் அசு ரட்டி மற்றும் ஜோதி ஏற்கனவே இது குறித்து விளக்கம் அளித்தனர். இந்த பட்டியலில் நடிகை சுரேகா வாணி மீது முக்கிய குற்றச்சாட்டு எழுந்தது அவர் போதை பொருள் உட்கொண்டதாக வதந்திகளும் பரவி வந்தது மேலும் சுரேகா வாணி கே.பி சவுத்ரியின் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படமும் வைரலானதை அடுத்து குடிபோதையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

அதற்கு தற்பொழுது சுரேகா வாணி கருத்து தெரிவித்துள்ளார் போதைப் பொருளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தயவு செய்து எங்களை குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள் உண்மைகளை அறியாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனது தொழில், எனது குழந்தைகளின் தொழில், எனது குடும்பத்தின் ஆரோக்கயம் போன்றவை பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். புரிந்துக் கொள்ளவும் தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று சுரேகா வாணி வீடியோவில் கூறியுள்ளார்.

Leave a Comment