பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடித்திருந்தேன்.! ஆனால் காட்சிகள் நீக்கப்பட்டது.. பிரபல நடிகரின் பேட்டி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தும் அந்த காட்சிகள் திரையில் தெரியவில்லை என்று வருத்தத்துடன் பிரபல நடிகர் விஜய் யேசுதாஸ் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கி வருபவர் தான் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் வெளியாகி வரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்று வருகிறது.

அந்த வகையில் பலருடைய கனவாக இருந்து வந்த வரலாற்று சிறப்புமிக்க காவியத்தில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக வேண்டும் என பலரும் நினைத்து வந்த நிலையில் சமீபத்தில் அதனை மணிரத்தினம் நிறைவேற்றி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை அடுத்து இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் இதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து பாடகர் விஜய் யேசுதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நபர் ஒருவர் எனக்கு தெரியும் அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறினார். அதோட அவர் இந்த படத்தின் இரண்டாவது இயக்குனர் ஆவார் அவர் இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தில் நடிப்பது பற்றி சொல்லி வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் என் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் நானும் ஒப்புக்கொண்டேன் நீளமாக வளர்ந்திருந்த தாடியை மட்டும் எடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. அதன் பிறகு கதாபாத்திரத்திற்கு ஏற்ற என்னை புகைப்படம் எடுத்து மணிரத்தினத்திடம் காட்டினார்கள். அவரும் சரி என்றார் அதற்குப் பிறகு படகில் பயணிப்பது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது பின் நான் திரும்பி வந்து விட்டேன்.

அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் என்னை வர சொன்னார்கள் குதிரையில் சவாரி செய்ய வேண்டி இருந்தது அந்த சமயத்தில் விக்ரமும் அருமையாக குதிரை சவாரி செய்தார்.  படம் வெளியான போது பார்த்தால் என்னுடைய காட்சி படத்தில்  இடம்பெறவில்லை.m நான் படத்தில் இல்லை மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருந்தும் அவரது படத்தில் வெளியே தெரியாமல் போனது என்னுடைய துரதிஷ்டம் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.

Leave a Comment