மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவிக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகை தானாம் !!

instead of actress sridevi she is the first one to act in munram pirai movie: இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இந்த திரைப்படம் எழுத்தாளர் அனுராதா ரமணனின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காதல் திரைப்படம் ஆகும். மேலும் இன்றளவும் இந்த திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி, கமலஹாசன் போன்றோர் நடித்திருந்தனர் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் ஸ்ரீதேவி விஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பதை அனைவரும் அறிந்ததே.

இந்த திரைப்படத்தில் கடைசி காட்சியில் ஸ்ரீதேவி அவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது கமல்ஹாசன் பிளாட்பார்மில் இருந்து அவரது கவனத்தை ஈர்க்க நிறைய பாவனைகளை செய்து காட்டுவார். இந்த காட்சியை பார்த்து அழாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இயல்பாக ஸ்ரீதேவியும் கமலும் நடித்திருப்பார்கள்.

நடிகை ஸ்ரீதேவி நடித்த இந்த விஜி என்கின்ற கதாபாத்திரம் முதலில் நடிகை ஸ்ரீபிரியாவுக்கு தான் வந்ததாம். இதனை நடிகை ஸ்ரீபிரியா ஒரு பேட்டியில் முன்னரே கூறியிருப்பார். அவர் சொந்த காரணங்களால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பின்னர் மற்றொரு நேர்காணலில் மூன்றாம் பிறை திரைப்படத்தில் விஜி கதாபாத்திரத்தில் நடிக்க இழந்ததை எண்ணி வருந்தினார். இவர் இயக்குனர் பாரதிராஜா, பாலுமகேந்திரா மட்டும் மணிரத்தினம் ஆகியோர்களின் தீவிர ரசிகையாம். ஒவ்வொரு அரிசியிலும் அதை உண்பவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்றொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல திரைப்படங்களிளும் எந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று உள்ளது போல என கூறினார்.

 

 

 

 

Leave a Comment