காதல் விஷயத்தில் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பது போல் பல பேருக்கு அம்பு விட்ட சிவகார்த்திகேயன்.?இப்படி ஒரு விஷயம் நடந்ததா என கேட்கும் ரசிகர்கள்..

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து பின்பு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை விடாமல் நடித்து தற்போது வெள்ளித் திரையில் கொடி கட்டி பறந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார்.

இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அந்த வாய்ப்பை நழுவ விடாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த திரைப்படங்கள் அனைத்துமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.

இப்பொழுது இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது இவரது நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது பல நிகழ்ச்சிகளிலும் இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பற்றி கூறியும் வருகிறார்.

அப்படி சிவகார்த்திகேயன் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றபொழுது தொகுப்பாளர் சிவகார்த்திகேயனை பார்த்து  உங்களிடம் யாராவது காதலை சொன்னார்களா அல்லது யாராவது அம்பு விட்டுருக்கிறார்களா என்று கேட்டதும் அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் எனக்கு யாரும் அம்பு விடவில்லை நான்தான் பல பேருக்கு அம்பு விட்டேன் ஆனால் அது எல்லாம் ரிட்டன் ஆகிவிட்டது.

காதல் விஷயத்தில் நான் ஒரு தலை காதலாக தான் காதலித்து வந்தேன் என்னை யாரும் காதலித்தது கிடையாது என அந்த பேட்டியில் கூறியதாக தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தைக் கூட சோகமாக சொல்லாமல் மிகவும் சிரித்துக் கொண்டே தான் கூறினாராம்.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அவர் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்ததால் தற்பொழுது அவரும் தனது கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாமல் சிரித்துக் கொண்டே வெளியே சொல்கிறார் போல என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment