சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது.! தயாரிப்பாளர் விரித்த வலையில் இருந்து டாடா காட்டிய தனுஷ்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தனுஷும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் தனுஷ் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பைனான்சியர் அன்புச்செழியன் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படம் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதாம் அதாவது அன்பு செழியனிடம் சில குறிப்பிட்ட தொகையை தனுஷ் கடனாக வாங்கி இருந்தாராம் அதற்காக அவரது திரைப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறியிருந்தாராம் மேலும் தனுஷிற்கு அவரது திரைப்படத்தில் நடிக்குவதற்கு விருப்பமில்லை என்றாலும் வாங்கிய கடனை எப்படியாவது கட்ட வேண்டும் என்ற நிலையில் தள்ளப்பட்டிருந்தாராம்.

பல இயக்குனர்களிடம் தனுஷை கதை கேட்க கூறியிருந்தாராம் தனுஷும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு விட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறிக் கொண்டே இருந்தாராம் இருப்பினும் தனுஷ் எப்படியாவது இவரிடம் இருந்து தப்பிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பைனான்சியரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்ற பொழுது திரை உலகமே பரபரப்பாகியது இருப்பினும் அந்த பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பின்பு தயாரிப்பாளர் இப்பொழுது படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

dhanush
dhanush

மேலும் இந்த விஷயத்தை கூறியதும் தனுஷ் மனதில் ஒரு சிறிய மகிழ்ச்சியாம் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று பார்த்த தனுஷ் தயாரிப்பாளரே கூறியதும் எப்படியோ ஒரு வழியாக தயாரிப்பாளரின் வளையில் இருந்து சிக்கி எஸ்கேப் ஆகி விட்டார் என்று இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment