இந்தியன்-2 விபத்து.! கமல் எடுத்த அதிரடி முடிவு.! ஆடிப்போன லைகா நிறுவனம்.!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகத்தை சங்கர் அவர்கள் இயக்கி வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது அதுமட்டுமில்லாமல்  வணிக ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து  இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது அப்படக்குழு.

சமீபத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் எடுத்து வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.இதில் மூன்று உதவி இயக்குனர் சம்வ இடத்தில உயிரிழந்தனர் அதுமட்டுமில்லாமல் சுமார் 10 பேர் படுகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பூந்தமல்லி எடுத்து செம்பரம்பாக்கம் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்த சண்டைக்காட்சியை பகலில் சண்டைபோடது போல காட்டுவதற்காக வெளிச்சம் காட்டுவதற்காக ராட்ச கிரேன் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான கிருஷ்ணா, சந்திரன், மதுசூதன ராவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் படக்குழு உருக்குலைந்து போனார்கள்.

இந்த கோர விபத்தினால் திரையுலகமே அதிர்ந்து போனது இந்த கோர விபத்துக்கு காரணம் சரியான பாதுகாப்பு இல்லாதது என பலர் கூறிவருகின்றனர். ராட்ச கிரேன் சரியான பாதுகாப்பு சோதணை இல்லாததால்  பாரம் தாங்காமல் அருந்தது என கூறிவருகின்றனர்.இதன் தொடர்பாக ஆப்பரேட்டர் ராஜன் மற்றும் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்பின் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

indian-2
indian-2

இதனை பற்றி பேசிய கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அது என்னவென்றால் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வேண்டும். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பையும் லைக்கா நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் பணிபுரிகிற கடைநிலை ஊழியர்கள் முதல் நடிகர் வரை  பாதுகாப்பு உறுதி செய்த பிறகே காட்சிகள் எடுக்க வேண்டும் என லைகா நிறுவனத்திடம் கமல் அவர்கள் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment